தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் இருபெரும் விழா

தூத்துக்குடி, மார்ச் 27: தூத்துக்குடி கிரேஸ்பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா என இருபெரும் விழா நடந்தது. தூத்துக்குடி முள்ளக்காட்டில் செயல்பட்டு வரும் கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இருபெரும் விழா கல்லூரிச் செயலாளர் பெட்ரோ ஜோசுவா, வினோத் தலைமையில் விமரிசையாக நடந்தது. கிரேஸ் கல்வி குழுமங்களின் தலைவர் ஜோசுவா முன்னிலை வகித்தார்.

கல்லூரி நிர்வாக அதிகாரி வீரராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் ஊக்கமூட்டும் பேச்சாளர் விஜய் கிருஷ்ணன் நேரம், ஆரோக்கியம் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினார். கல்வி பயில வகுப்புகளுக்கு 100% வருகை தந்த மாணவர்களுக் ஊக்க தொகை, வாரிய தேர்வுகள் மற்றும் விளையாட்டில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்று, கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் இருபெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: