விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

விகே புரம், மார்ச் 27:விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து விகேபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் ஆறுமுகம்பட்டியில் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அரிசி மூடைகளை கைப்பற்றி, பதுக்கி வைத்திருந்த கடையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் தேவராஜ் (35) என்பரையும் பிடித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

The post விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: