7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை, மார்ச் 27: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (64). இவர், 2019 ஜனவரியில் மயிலாப்பூர் பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தேவராஜை கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், தேவராஜ்க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

The post 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: