அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கவிதா அரசியல் காரணத்திற்காக பொய்யாக வழக்கு புனையப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவிதாவிற்கு இடைக்கால ஜாமின் கேட்டு அவரது வழக்கறிஞர்கள் மனு செய்தனர். ஆனால் தற்போதைய சூழலில் கவிதாவுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் அவரை நீதிமன்ற காவலில் வைக்க வலியுறுத்தினார். இதனை ஏற்று கவிதாவை ஏப்ரல் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி. இடைக்கால ஜாமின் கோரும் மனுவை ஏப்ரல் 1ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக இதுவரை டெல்லி முதலமைச்சர். அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, சஞ்ஜய் சிங் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
The post மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவுக்கு நீதிமன்ற காவல்: ஏப்ரல் 9 வரை கவிதாவை சிறையில் அடைக்க நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.