தூத்துக்குடியில் மகனுடன் தாய் மாயம்

தூத்துக்குடி, மார்ச் 26: தூத்துக்குடி அந்தோணியார்புரம், வேளாங்கண்ணி 7வது தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் குணசேகரன்(30), லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு பெனிட்டாமேரி(24) என்ற மனைவியும் 3 வயதில் மகனும் உள்ளனர். குணசேகரன், கடந்த ஜன.16ம் தேதி முதல் பிப்.10ம் தேதி வரை பீகாரில் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

பிப்.10ம்தேதி ஊருக்கு திரும்பியபோது மனைவி, மகனை காணவில்லை. உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தூத்துக்குடியில் மகனுடன் தாய் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: