100% சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருப்புத்தூரில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்புத்தூர், மார்ச் 26: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புத்தூர் பஸ்ஸ்டாண்டில் 100% சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டது. திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் வருவாய்த்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் முன்னிலையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணப் பெருமாள் தொடங்கி வைத்தார்.

இதில் நடமாடும் வாக்காளர் சேவை மையம் வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிப்போம் என மணி அடித்து கையொப்பமிடும் நிகழ்ச்சி மற்றும் அனைத்து பேருந்துகளிலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19ம் தேதி அன்று தவறாமல் வாக்களிப்போம் என அடங்கிய போஸ்டர் ஸ்டிக்கர் அனைத்து பேருந்துகளிலும் ஒட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post 100% சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருப்புத்தூரில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: