அன்று மாலை பவானிசங்கர் தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவியுடன் தகராறு ஏற்பட்டு தாக்கியுள்ளார். மேலும் மகாலட்சுமியின் தலைமுடியை வெட்டி, புருவங்களையும் மழித்துள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி, போலீசில் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைபடுத்தியதாக புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் பவானிசங்கரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை போலீஸ்காரர் கைது appeared first on Dinakaran.