பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ

 

சிவகங்கை, மார்ச் 25: சிவகங்கை பேருந்து நிலையத்தில் பயணிகளுடன் வந்த பேருந்தில் திடீரென தீப்பிடித்தால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மதுரையில் இருந்து அரசு பேருந்து நாட்டரசன்கோட்டை நோக்கி வந்தது. இந்நிலையில் ஓட்டுநர் கிறிஸ்துதாஸ் என்பவர் பேருந்தை சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கியபோது திடீரென பேருந்தில் தீ பற்றியது. பேருந்தின் இஞ்சினில் இருந்து அதிக சத்தத்துடன் புகை கிளம்பியதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

பேருந்தில் இருந்தவர்கள் பேருந்தின் இஞ்சின் அலறல் சத்தத்தை கேட்டு அலறி அடித்து ஓடினர். அக்கம்பக்கத்தில் இருந்த சாலையோர கடைகளும் உடனடியாக அகற்றப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் எந்தவித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். பேருந்து தீப்பிடித்ததால் பொது மக்கள் பேருந்து நிலையத்தில் கூடினார்கள். இந்த சம்பவத்தால் சிவகங்கையில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ appeared first on Dinakaran.

Related Stories: