விருதுநகர் காங். வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

அருப்புக்கோட்டை, மார்ச் 24: அருப்புக்கோட்டை நாடார் சிவன் கோவில் பகுதியில் விருதுநகர் தொகுதி காங். வேட்பாளரை ஆதரித்து தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது, இங்கு கூடியுள்ள கூட்டத்தினை பார்க்கும் போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஒரு லட்சத்து 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரை இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்ய வேண்டும். தமிழக மக்களின் உரிமைகளை மீட்டு எடுக்கவேண்டும் எனில் வரும் 19ம் தேதி நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

விருதுநகர் மட்டுமில்ல தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்ந்த 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும் இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, எம்எல்ஏக்கள் தங்கபாண்டியன், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

The post விருதுநகர் காங். வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: