திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்

திருவையாறு, மார்ச்24: திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை அன்னபூரணி அம்பிகா சமேத ஓதவனேஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலகாரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுவாமி, அம்பாளுடன் தேரில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் நான்கு வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்திவேல், அன்னபூரணி தர்மசத்திரம் அறக்கட்டளை பரம்பரை டிரஸ்டி சிவகண்ணன் மற்றும் அலுவலர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: