திருவாரூர் முத்துப்பேட்டை இலவச முகாமில் 63 பயனாளிகளுக்கு கண்அறுவை சிகிச்சை

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை இலவச முகாமில் 63 பயனாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோவை சங்கரா மருத்துவமனை, திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திருமேனி பத்தர், ராஜலட்சுமி, அக்ரி சண்முகம் நினைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் வட்டார காங்கிரஸ் தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் 165 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 60நபர்கள் அறுவை சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த முகாமில் வேதசங்கர் சபாபதி, திருமேனி மகாலிங்கம், ராஜ்மோகன், கண்ணதாசன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

The post திருவாரூர் முத்துப்பேட்டை இலவச முகாமில் 63 பயனாளிகளுக்கு கண்அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: