கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூ.,கட்சி அலுவலகம் திறப்பு

கந்தர்வகோட்டை, மார்ச் 24: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தஞ்சை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் 23ம் தேதி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கட்டிடத்தை மாவட்ட செயலாளர் கவிவர்மன் திறந்து வைத்தார். அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் சங்கரய்யா திருவுருவப்படத்தை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கருப்பையா படத்தை திறந்து வைத்தனர்.மாவட்ட செயலாளர் கவிவர்மன் லெனின் திருவுருவப்படத்தையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்.

ராமையன், செல்வராசு திருவுருவப்படத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் வீராசாமி உருவப்படத்தை அஇவிதொச மாவட்ட செயலாளர் சலோமி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதியழகன். தெற்கு ஒன்றிய செயலாளர். ரெத்தினவேல் ஒன்றிய செயலாளர். கலைச்செல்வன் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் லெட்சாதிபதி. மாவட்டக் குழு உறுப்பினர் . பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூ.,கட்சி அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: