பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் போலீசுக்கு போக்கு காட்டிய நபர் 2 ஆண்டுக்கு பின் கைது

நாகப்பட்டினம், மார்ச் 24: பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியவரை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகப்பட்டினம் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பெண்னுக்கு கடந்த 2022ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ் ஆப் மூலமாக ஆபாச படங்களை அனுப்பினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகப்பட்டினம் சைபர் க்ரைம் போலீசார் குற்றவாளியை அடையாளம் கண்டனர். இதைபடுத்து பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வசந்தராஜனை(45), நாகப்பட்டினம் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

The post பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் போலீசுக்கு போக்கு காட்டிய நபர் 2 ஆண்டுக்கு பின் கைது appeared first on Dinakaran.

Related Stories: