இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், பெரோஸ் இஸ்மாயில், அப்சர்கான், உமர்பாரூக், முகமது தவ்பிக் முகமது இத்ரீஸ் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். ஜமேஷா முபினுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் (52), உக்கடம் முகமது உசேன் பைசி (38), குனியமுத்தூர் இர்சாத் (22), ஜமீல் பாஷா உமரி (30) ஆகிய 4 பேரை கோவை அழைத்து வந்த என் ஐ ஏ அதிகாரிகள் அவர்களை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேரை காவலில் எடுத்து என்ஐஏ மீண்டும் விசாரணை appeared first on Dinakaran.