இதைத் தொடர்ந்து ஒரு சில மசோதாக்களில் மட்டும் கையெழுத்து போட்ட கவர்னர், 7 மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதில் மூன்றில் மட்டும் கையெழுத்து போட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் நேரடியாக ஜனாதிபதியை குறிப்பிடவில்லை என்றாலும், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் ஆகியோரது பெயர்கள் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுவது ஒரு அசாதாரணமாக நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை ஜனாதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: கேரள அரசின் அசாதாரணமான நடவடிக்கை appeared first on Dinakaran.