கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் லாரி உரிமையாளர் பலி

கோவில்பட்டி, மார்ச் 24:கோவில்பட்டி அருகேயுள்ள சிப்பிப்பாறையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (45). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று செல்வகுமார் தனது பைக்கில் ஊரிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். வெங்கடாசலபுரம் விலக்கு அருகே வந்தபோது, கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் நோக்கி சிமென்ட் மூடைகளை ஏற்றிச்சென்ற லாரி அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து லாரி டிரைவர் தப்பியோடி விட்டார்.

தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ்ஆனந்த், எஸ்ஐ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமார் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றிய போலீசார், அதன் டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த லாரி டிரைவர் செல்வகுமாருக்கு மனைவி பரிமளா, ஒரு மகன், மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் லாரி உரிமையாளர் பலி appeared first on Dinakaran.

Related Stories: