விஷம் குடித்த காவலாளி சாவு

வீரவநல்லூர்,மார்ச் 24: கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு கரம்பை வெற்றி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி (57). வீரவநல்லூர் அடுத்த ரெட்டியார்புரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்துவந்தார். இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மணி, நேற்று முன்தினம் தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கினார். பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் வீரவநல்லூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வீரவநல்லூர் போலீசார் மணியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அவரது மகன் கேசவன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து நடத்தி வருகின்றனர்.

The post விஷம் குடித்த காவலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: