திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர், மார்ச் 23: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் நந்தி பெருமானை தரிசனம் செய்தனர். அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில்வரும் வரும் பிரதோஷ நாளில் பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் இந்த பிரதோஷம் என்பது மற்ற தினங்களை விட சனி கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்புடையதாக கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரதோஷ தினத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நந்தி பெருமானுக்கு பால், சந்தனம், மற்றும் மஞ்சள் தூள், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை வழிபட்டனர்.

4 எம்எல்ஏ தொகுதிகளுக்கும் ரேண்டம் முறையில் 3 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்திலும், வரலாற்றில் இல்லாத வகையில் முன்கூட்டியும் திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலான அளவில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டனர்.

The post திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: