திருமருகலில் வாக்காளர் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

நாகப்பட்டினம், மார்ச் 23: திருமருகலில் வாக்காளர் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமருகலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) மரியதாஸ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்பு பேரணி தொடங்கி சந்தைப்பேட்டை, கடைத்தெரு வழியாக திருமருகல் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு ஜனநாயக கடமையாற்ற லஞ்சம் பெற மாட்டோம். 100 சதவீதம் வாக்களிப்போம் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து கையெழுத்து இயக்கம் நடந்தது.

வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கையொப்பமிட்டு தங்களது வாக்குப்பதிவை உறுதி செய்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாறன் மற்றும் பலர் கலந்து பலர் கொண்டனர்.

The post திருமருகலில் வாக்காளர் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: