அதேநேரம், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வகையில் மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லசுக்கு அந்த தொகுதியை பாஜவிடம் கேட்டார். ஆனால் அவர்கள் தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கியுள்ளனர். இதனால் தூத்துக்குடி வேட்பாளராக என்.டி.எஸ் சார்லசுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. காங்கிரசில் இருந்து பிரிந்து வந்து தமாகாவை மீண்டும் ஜி.கே.வாசன் தொடங்கிய போது சைக்கிள் சின்னத்தை பெற பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் கிடைக்காததால் பல்வேறு சின்னங்களில் போட்டியினர்.
ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் இணைந்துள்ள தமாகாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியின் போது, சைக்கிளை ஓட்டி தனது பிரசாரத்தை மக்களிடம் வாக்கு கேட்டு தனது பிரசாரத்தை ஜி.கே.வாசன் தொடங்கினார்.
* 27ம் தேதி முதல் பிரசாரம்
ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘வரும் 27ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல் 17ம்தேதி வரை 21 நாட்கள் பிரச்சாரம் செய்கிறேன்’’ என்றார்.
The post தூத்துக்குடி தமாகா வேட்பாளர் நாளை தெரியும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு: ஜி.கே.வாசன் அறிவிப்பு appeared first on Dinakaran.