தேனி, மார்ச் 22: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் நடக்க உள்ள முதல் கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்ட கலெக்டரும் தேனித் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷஜீவனா கூறியிருப்பதாவது:
தேனி பாராளுமன்றத் தேர்தலையொட்டி தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மற்றும் தேனி தாலுகாவிற்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 24ம் தேதி காலை 9 மணி முதல் அன்றைய தினம் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது.
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு ஆண்டிபட்டி, வேளாங்கன்னி மாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும்பேடி தொகுதிக்கு போடி ஜெட்கேஎம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு தேனி மேரிமாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியிலும் தேனி தாலுகாவிற்கு தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா கல்லூரியிலும் பயிற்சி நடக்க உள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
The post முதற்கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு அலுவலர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.