தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

 

தஞ்சாவூர், மார்ச் 22: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தஞ்சை கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை. இந்த நிலையில் 2-ம் நாளான நேற்று வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தஞ்சை கலெக்டர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை appeared first on Dinakaran.

Related Stories: