வளனார் கல்லூரியில் உளவியல் கருத்தரங்கம்

கழுகுமலை, மார்ச் 22: கழுகுமலை அருகே உள்ள வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயலர் அருட்தந்தை ஜோசப் கென்னடி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் காசிராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி உளவியல் ஆலோசகர் ஜோபாய் பச்சேக் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும். சமூக மாற்றம் தனிமனிதனிடம் இருந்து தொடங்க வேண்டும். மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் தாய், தந்தையர் படும் கஷ்டங்களை மனதில் பதிய வைத்து நன்றாக படிக்க வேண்டும். தவறான பழக்க வழக்கத்திற்கு அடிமையாக கூடாது, என்றார். சில மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உளவியல் ஆலோசனைகளை வழங்கினார். கருத்தரங்கில் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post வளனார் கல்லூரியில் உளவியல் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: