பிளஸ் 1 பொதுத்தேர்வில் 440 பேர் ‘ஆப்சென்ட்’

மதுரை, மார்ச் 22: மதுரையில் நேற்று பிளஸ் 1 பொதுத்தேர்வு 3 பாடங்களுக்கு நடந்தது. இதில் 33,647 பேர் பங்கேற்ற நிலையில், 440 பேர் தேர்வெழுத வரவில்லை. தமிழகத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்கிய நிலையில், 25ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 35,054 மாணவ, மாணவியர் தேர்வெழுதி வருகின்றனர். நேற்று மாவட்டத்தின் பல்வேறு மையங்களிலும் வேதியியல், கணக்கியல், புவியியல் ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் வேதியியல் தேர்விைன 20,054 பேர் எழுதிய நிலையில், 163 பேர் தேர்வெழுதவில்லை. கணக்கியல் தேர்வை 11,995 பேர் எழுதினர். 194 பேர் ஆப்சென்ட் ஆகினர். புவியியல் தேர்வில் 1,598 பேர் பங்கேற்ற நிலையில் 83 பேர் கலந்துகொள்ளவில்லை. இதன்படி மூன்று தேர்வுகளில் 34,087 பேர் எழுதவேண்டியதற்கு பதிலாக, 33,647 பேர் எழுதினர். 440 பேர் தேர்வெழுத வரவில்லை.

The post பிளஸ் 1 பொதுத்தேர்வில் 440 பேர் ‘ஆப்சென்ட்’ appeared first on Dinakaran.

Related Stories: