தம்பதியை தாக்கிய தந்தை, மகன், மகள் உள்பட 4 பேர் கைது

மதுரை, மார்ச் 22: மதுரையில், தம்பதியை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை, மீனாம்பாள்புரம் அன்பழகன்(45) என்பவருக்கும், அருகில் வசிக்கும் ஜெயமணி(55) என்பவருக்கும் இடையே இடப்பிரச்னை இருந்து வருகிறது. கடந்த, 18ம் தேதி இரவு அன்பழகன் அவரது வீட்டின் முன் நண்பர் ராமகிருஷ்ணனுடன் நின்றிருந்தார். அப்போது, ஜெயமணி, அவரது மகன் ஜோதிமணி(19) ஆகியோர் ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதனை தடுத்த அன்பழகன், அவரது மனைவி ஜெயமணியும் தாக்குதலுக்கு உள்ளாயினர். இதில் ஜெயமணியின் மகள் கமலி (27), தங்கை பரமேஸ்வரி (38) ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த அன்பழகன், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செல்லூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயமணி, அவரது மகன் ஜோதிமணி, மகள் கமலி மற்றும் தங்கை பரமேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர்.

The post தம்பதியை தாக்கிய தந்தை, மகன், மகள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: