பாஜ கொடியுடன் சென்ற காரில் ₹2 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி கடலூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு

வந்தவாசி, மார்ச் 21: வந்தவாசி அருகே பாஜ கொடியுடன் சென்ற காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக காஞ்சிபுரம் நோக்கி பாஜ கொடியுடன் சென்ற சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, காரில் வந்த கடலூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஜெயராமன் என்பவர் ₹2 லட்சத்தை எடுத்து செல்வது தெரியவந்தது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே, தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பொன்னுசாமியிடம் ஒப்படைத்தனர். பின்னர், பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. காரில் பணத்துடன் வந்த ஜெயராமன் தனது மகன் திருமணத்திற்காக காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்க சென்றதாக கூறப்படுகிறது.

The post பாஜ கொடியுடன் சென்ற காரில் ₹2 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி கடலூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு appeared first on Dinakaran.

Related Stories: