சாலை வளைவில் கவிழ்ந்த தனியார் பள்ளி பஸ் 25 மாணவர்கள் காயம் கலசபாக்கம் அருகே

கலசபாக்கம், மார்ச் 21: கலசபாக்கம் அருகே தனியார் பள்ளி பஸ் சாலை வளைவில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் 25 மாணவர்கள் காயம் அடைந்தனர். கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், காரியந்தல் கிராமத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வர பள்ளி சார்பில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை காரியந்தல் கிராமத்தை சேர்ந்த ஐசக் மகன் தீபக்(35) என்பவர் ஓட்டிச்சென்றார். தொடர்ந்து, வெளுங்கநந்தல் கிராமத்தில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி பஸ் வந்து கொண்டிருந்தது. பின்னர், அங்குள்ள வளைவில் எதிரே வந்த டிராக்டரால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பஸ் அருகில் உள்ள விவசாய நிலத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள் 25 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி பஸ் தலைகீழாக கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சாலை வளைவில் கவிழ்ந்த தனியார் பள்ளி பஸ் 25 மாணவர்கள் காயம் கலசபாக்கம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: