குறித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னை வாலிபர் பலி

மார்த்தாண்டம், மார்ச் 21: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற சென்னை வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார். சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் கார்வல் காஸ்ட்ரோ. இவரது மகன் டெரிக் (36). இவர் குழித்துறை கழுவன்திட்டையை அடுத்த கோணம் பகுதியில் நேற்று நடந்த உறவினரின் ஈமச்சடங்கில் கலந்து கொண்டார். ஈமச்சடங்கு முடிந்த பிறகு குழித்துறை செக் டேம் பகுதியில் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். குளித்துக்கொண்டு இருக்கும்போது டெரிக்கை காணவில்லை . இதனால் பதற்றம் அடைந்த நண்பர்கள் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். பொதுமக்களும் ஆற்றில் தேடத் தொடங்கினர். தண்ணீரில் மூழ்கிக்கிடந்த டெரிக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் காப்பாற்ற முடியவில்லை .ஏற்கனவே மூச்சு திணறி டெரிக் உயிரிழந்திருந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குறித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னை வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: