சூதாட்டம்; 7 பேர் கைது

 

ஈரோடு, மார்ச் 21: கடத்தூர் அடுத்துள்ள இ செட்டிபாளையத்தில் வாழைத்தோட்டத்தில் சூதாட்டம் நடப்பதாக கடத்தூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நம்பியூர், இருகலூரை சேர்ந்த வீராசாமி (43), இ. செட்டிபாளையம் வெள்ளியங்கிரி (42), மகேந்திரன் (29), சாணார்புதூர் தேவராஜ் (39), காளியப்பன் மகன் ராகுல் (24), விஜயகுமார் (29), அய்யாசாமி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

The post சூதாட்டம்; 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: