மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 72,102 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 72,102 புள்ளிகளானது. மாருதி சுசூகி பங்கு 2.9%, பவர்கிரிட், நெஸ்லே பங்குகள் தலா 2%, எஸ்பிஐ பங்கு 1.9%, ஐடிசி பங்கு 1.5% விலை உயர்ந்தன. ரிலையன்ஸ் 1%, கோட்டக் வங்கி, டெக் மகிந்திரா பங்கு 0.9%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 0.8% விலை உயர்ந்து விற்பனையாயின. டாடா ஸ்டீல் பங்கு 1.9%, டாடா மோட்டார்ஸ் 1.7%, ஆக்சிஸ் வங்கி பங்கு 1.5% விலை குறைந்து வர்த்தகமாயின. எச்.டி.எஃப்.சி. வங்கி, இந்துஸ்தான் யுனிலீவர், JSW ஸ்டீல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 72,102 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: