சவரனுக்கு காலையில் ரூ.360 உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் ரூ.360-உயர்த்துள்ளது. இதன் மூலம் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 90 உயர்ந்து ரூ.6,705-க்கும் சவரன் ரூ.53,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கு விற்பனையாகிறது. இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் காஸாவில் நடக்கும் போர் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. மேலும் சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாலும் சீன மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளனர்.சீன மக்கள் மட்டுமின்றி சீன மத்திய வங்கியும் தங்கத்தை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்கிறது.இதுவே உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
The post அட்சய திருதியையான இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் விலை :ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை!! appeared first on Dinakaran.