கோயிலில் திருடிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை

கருங்கல், மார்ச்17: கருங்கல் அருகே கிள்ளியூர் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயிலில் கடந்த வருடம் பூட்டை உடைத்து உண்டியல் பணம், விளக்கு , மணி உள்ளிட்டவை திருடு போனது. இது சம்பந்தமாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 29) என்பரை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அன்பரசனுக்கு இரணியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்காததால் , 8 மாதமாக சிறையிலேயே உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இரணியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் நீதிபதி அமர்தீன் திருட்டு வழக்கில் அன்பரசனுக்கு ஆறு வருட சிறை தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இரணியல் நீதிமன்றத்தில் தற்போது நீதிபதி பல்வேறு திருட்டு வழக்கில் சிக்குபவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் குறிப்பிட்ட மாதத்திலையே வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்குவதால் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்து சர்வ சாதாரணமாக திருடுவதை தடுக்க முடிகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

The post கோயிலில் திருடிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: