தினமும் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வாயுகசிவு ஏற்பட்ட உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் சின்னகுப்பம் வரை உள்ள 33 மீனவ கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது உரத் தொழிற்சாலையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்ட உர தொழிற்சாலையை மூடக்கோரி மக்கள், வியாபாரிகள் மனித சங்கிலி appeared first on Dinakaran.