இதுகுறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019 குடியுரிமையை பறிப்பதல்ல. குடியுரிமையை வழங்குவது. 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த இந்து, புத்த, சீக்கிய, பார்சி, ஜைன மற்றும் கிறித்துவ சமூகத்தினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. இந்த சட்டம் இந்தியாவின் உள்விவகாரம். இதுகுறித்த அமெரிக்காவின் கருத்து தவறானது மற்றும் தேவையற்றது. இந்தியாவின் கூட்டாளிகள், நலன் விரும்பிகள் இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட நோக்கத்தை புரிந்து கொண்டு வரவேற்க வேண்டும்” என்று கூறினார்.
The post சிஏஏ சட்டம் இந்தியாவின் உள்விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி appeared first on Dinakaran.