கரும்பு விவசாயி சின்ன விவகாரம்: நாம் தமிழர் கட்சி வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி ஹெச்.எம்.ஜெ.மன்மீத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘இந்த விவகாரத்தில் முன்னதாக பதிவு செய்த கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து விட்டதால், இதில் தலையிட்டு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

அப்படி செய்தால் அது இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளுக்கு எதிராக அமைந்து விடும். அதனால் நாங்கள் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என்று எழுத்துப்பூர்வ உத்தரவை கடந்த 4ம் தேதி வழங்கியிருந்தது. இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

 

The post கரும்பு விவசாயி சின்ன விவகாரம்: நாம் தமிழர் கட்சி வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: