சென்னை: சென்னை திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேர்தலையொட்டி ரவுடிகள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.