காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மார்ச் 15: மீண்டும் மத்தியில் பாஜ ஆட்சி அமைத்தால், அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தை மாற்றி, புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குவோம் என பாஜ எம்.பி. ஆனந்த் ஹெக்டே பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு ெதரிவித்து, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி எஸ்.சி பிரிவு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.சி பிரிவு தலைவர் பொன்முடி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், முன்னாள் எஸ்.சி பிரிவு மாவட்ட தலைவர் பொன்னையன், மாநில மகளிர் காங்கிரஸ் செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வட்டார தலைவர் இளங்கோ, மாவட்ட பொது செயலாளர் அன்பழகன், ஜோதீஸ்வரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பாஜ எம்பியை கண்டித்து கோஷமிட்டனர்.

The post காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: