வார்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

காரிமங்கலம், மார்ச் 14: காரிமங்கலம் ஒன்றியம், கெண்டிகானஅள்ளி ஊராட்சியில், வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கண்ணாயி மாரிமுத்து தலைமையில் நடந்தது. துணை தலைவர் பிரியாமணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க, வார்டு உறுப்பினர்கள் கேட்டு கொண்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் ஆனந்தி, ஜாகிர் உசேன், முனியம்மாள், மாதையன், மும்தாஜ், சுமதி, கற்பகம், கந்தன், ஊராட்சி செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வார்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: