தூத்துக்குடி அருகே ஆட்டோவில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஸ்பிக்நகர், மார்ச் 13: தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் பகுதியில் ஆட்டோவில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து முத்தையாபுரம் எஸ்ஐ சுந்தரம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆட்டோவில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற இருவரை போலீசார் சுற்றி வளைத்தபோது இருவரும் அவதூறாக பேசியதோடு கத்தியால் தாக்க முயன்றனராம். இதில் சுதாரித்துக்கொண்ட போலீசார் இருவரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முத்தையாபுரம் சுந்தர்நகரை சேர்ந்த முத்துக்குமார் (51), வேம்படிமுத்துவின் மகன் முத்துராஜ் (39) என்பதும் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் இருவரையும் கைதுசெய்தனர். மேலும் 300 கிராம் கஞ்சாவுடன் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

The post தூத்துக்குடி அருகே ஆட்டோவில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: