தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு

மணப்பாறை, மே 11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ராயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி அடையாததால் மனமுடைந்த அச்சிறுவன் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான். தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் சிறுவனை உயிருடன் காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: