தஞ்சாவூரில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே11:தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முருகானந்தம், நிர்வாகிகள் தாமரை செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணை தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர் சிவகுருநாதன், சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களாக பொட்டலமாக வழங்க வேண்டும். சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை இறக்காமல் அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளில் எடை தராசு மற்றும் நடமாட்ட பணியாளர் வர வேண்டும்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: