போலீசாருக்கு எஸ்பி பாராட்டு தனித்துறை உருவாக்க வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மே 11: நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களை எடை குறையாமல் கடை விற்பனையாளர்கள் முன்னிலையில் எடை வைத்து வழங்க வேண்டும், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அனைத்து நோய்களுக்கும் விரிவுபடுத்துவதுடன், மருத்துவ படியினையும் உயர்த்தி வழங்க வேண்டும்.

பணிவரன்முறை செய்யப்படாத ஊழியர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும், நியாய விலை கடைகளுக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும், பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும், மாதத்தின் முதல் தேதியில் ஊதியம் வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் குனசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட பொருளாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post போலீசாருக்கு எஸ்பி பாராட்டு தனித்துறை உருவாக்க வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: