இந்நிலையில், சாலவாக்கம் மதுபான கடை கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா புதுப்பட்டு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக சாலவாக்கம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார், புதுப்பட்டு கிராமத்திற்கு விரைந்து அங்கு பதுங்கி இருந்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (19), விஷ்வா (எ) விக்னேஷ்வரன் (20) மற்றும் ஜானகிபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருந்த மதுபானங்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மோகன்குமார், மற்றும் கார்த்திக் ஆகிய பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்படி, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட நபர்கள் பெருநகர், வந்தவாசி, செங்கல்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபானங்களை திருடிய 3 வாலிபர்கள் கைது: மேலும் இருவருக்கு வலை appeared first on Dinakaran.