கலையூர் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

 

பரமக்குடி, மார்ச் 12: பரமக்குடி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கலையூர் கிராமத்தில் புதிய மின்மாற்றியை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கலையூர் கிராமத்தில் அதிகமான மின் இணைப்புகள் உள்ளதால், குறைந்த அளவு மின்சாரம் கிடைக்கப் பெற்றது. இதனால் குடியிருப்புவாசிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து பரமக்குடியை எம்எல்ஏவிடம் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 51ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை நேற்று பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பரமக்குடி உதவி மின் பொறியாளர் செல்லத்துரை, கலையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுபேக ஆறுமுகம், கிளைச் செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கலையூர் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: