அப்போது அங்கு சென்று பூட்டப்பட்டிருந்த இறால் பண்ணை கொட்டகையின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது ஹஷிஷ், கஞ்சா போன்ற கடத்தல் பொருட்கள் அடங்கிய 48 பைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஆய்வு செய்தனர். அதில், ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹஷிஷ் மற்றும் ரூ.1.05 கோடி மதிப்பிலான 876 கிலோ உலர்கஞ்சா போதைப்பொருள் என தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் இறால் பண்ணையின் உரிமையாளர் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டிணத்தை சேர்ந்த அமீர்சுல்தான் என தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.
The post இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.111 கோடி போதை பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.