இதுதொடர்பாக துவாரக் உதயசங்கர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்பேரில் ஜானி தாமஸ், அவரது மகன் ரான் ஜானி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் ஜானி தாமசை நெடும்பாசேரி விமான நிலையத்தில் கடந்த 14ம் தேதி வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜானி தாமஸை கோவை அழைத்து வந்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அவரது மகன் ரானி ஜானை தேடி வருகின்றனர்.
The post ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் மலையாள சினிமா பட தயாரிப்பாளர் கைது appeared first on Dinakaran.