மோடி கேரண்டிக்கு இல்லை வாரண்டி: திரிணாமுல் கிண்டல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரிகேட் பரேட் மைதானத்தில் நேற்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்பியுமான அபிஷேக் பானர்ஜி, ‘‘மோடி தரும் கேரண்டிகளுக்கு(வாக்குறுதிகள்) எந்த வாரண்டியும்(உத்தரவாதம்) கிடையாது. மம்தா, திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்கள். பாஜவும் அதன் தலைவர்கள் வெளிநபர்கள், மேற்கு வங்கத்திற்கு எதிரானவர்கள். அதனால்தான் மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளார்கள். இதற்கு மேற்கு வங்க மக்கள் தேர்தலில் சரியான பதிலடி தருவார்கள். இங்கு அமலாக்கத்துறை, சிபிஐ சோதனைகள் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என்றார்.

The post மோடி கேரண்டிக்கு இல்லை வாரண்டி: திரிணாமுல் கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: