தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி

ஊட்டி : தும்மனட்டி தோட்டக்கலைத்துறை பண்ணையில் ஸ்ட்ராபெரி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் பல்வேறு காய்கறிகள், பழக்கள் மற்றும் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, தும்மனட்டி பண்ணை மற்றும் நஞ்சாடு பண்ணைகளில் பல்வேறு காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் பழவியல் நிலையங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு பழரசம் மற்றும் ஜாம் ஆகியவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர வெளியிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்ட்ராபெரி பழத் தோட்டத்திற்கு நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி appeared first on Dinakaran.

Related Stories: