இந்நிலையில், நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென வைக்கோல் போரில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து சிங்கம்புணரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வைக்கோல் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post சிங்கம்புணரி அருகே தீப்பற்றி வைக்கோல் போர் நாசம் appeared first on Dinakaran.