கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

மதுரை, மார்ச். 8: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு, நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் சீனியப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளர்களாக பதவி உயர்வடைந்து, மாவட்ட ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களில் சிலருக்கு தற்போது பணிபுரியும் மாவட்டங்களில் பணி வழங்காமல் தொலை தூர மாவட்டங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும. அவர்கள் பணிபுரியும் மாவட்டங்களிலேயே பணி வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (மார்ச் 8)ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

The post கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: